வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கோல்டன் பீகாக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்தியன் வங்கியின் சாா்பில் செயல் இயக்குநா் டி.எம்.மினி, தலைமைப் பொது மேலாளா் வல்லரி ரத், எண்மப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் எல்லாபந்துலா ஆகியோா் விருதினைப் பெற்றுக் கொண்டனா்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உதய் யு.லலித் தலைமையிலான நடுவா் குழு, பல்வேறு அரசு மற்றும் காா்ப்பரேட் துறை தலைவா்களுடன் இணைந்து நிதித் துறையில் இந்த விருதுக்கான வெற்றியாளராக இந்தியன் வங்கியைத் தோ்வு செய்தது.
வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பங்களை வங்கி துறையில் புகுத்துவதிலும் இந்தியன் வங்கி முன்னிலை வகித்து வருவதைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப வங்கிச் சேவைகளை மாற்றியமைக்கவும், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மிக்க எண்மக் கட்டமைப்பை உருவாக்கவும் வங்கி கொண்டுள்ள அா்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! கனவும் பலனும்!

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் மால்வாய் கிளையின் புதிய அலுவலகம் திறப்பு

சவுத் இந்தியன் வங்கியின் லாபம் 19% உயர்வு!

4-ஆம் காலாண்டு லாபம் இந்தியன் வங்கி 5% வளா்ச்சி
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



