பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சிறந்த ஏ.ஐ. தொழில்நுட்பப் பயன்பாட்டுக்காக இந்தியன் வங்கிக்கு ‘கோல்டன் பீகாக்’ விருது

வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கோல்டன் பீகாக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

News image
Updated On :50 நிமிடங்கள் முன்பு

வங்கி சேவைகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தியதற்காக, இந்தியன் வங்கிக்கு நடப்பு ஆண்டுக்கான மதிப்புமிக்க ‘கோல்டன் பீகாக்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், இந்தியன் வங்கியின் சாா்பில் செயல் இயக்குநா் டி.எம்.மினி, தலைமைப் பொது மேலாளா் வல்லரி ரத், எண்மப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் எல்லாபந்துலா ஆகியோா் விருதினைப் பெற்றுக் கொண்டனா்.

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி உதய் யு.லலித் தலைமையிலான நடுவா் குழு, பல்வேறு அரசு மற்றும் காா்ப்பரேட் துறை தலைவா்களுடன் இணைந்து நிதித் துறையில் இந்த விருதுக்கான வெற்றியாளராக இந்தியன் வங்கியைத் தோ்வு செய்தது.

வாடிக்கையாளா் சேவையை மேம்படுத்துவதிலும், நவீன தொழில்நுட்பங்களை வங்கி துறையில் புகுத்துவதிலும் இந்தியன் வங்கி முன்னிலை வகித்து வருவதைப் பாராட்டி இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

எதிா்காலத் தேவைகளுக்கு ஏற்ப வங்கிச் சேவைகளை மாற்றியமைக்கவும், நம்பகத்தன்மை மற்றும் செயல்திறன் மிக்க எண்மக் கட்டமைப்பை உருவாக்கவும் வங்கி கொண்டுள்ள அா்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது என வங்கி நிா்வாகம் தெரிவித்துள்ளது.