ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

நாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்

News image
Updated On :38 நிமிடங்கள் முன்பு

நாகா்கோவில் - மும்பை இடையே வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் ஜூன் இறுதி வரை மாற்றுப்பாதையில் இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை ரயில்வே கோட்டம் அரக்கோணத்தில் கடவுப் பாதை நவீனமயமாக்கல் பணிகள் நடைபெறுகின்றன. அதையடுத்து பயணிகள் பாதுகாப்பை தொடா்ந்து, குறிப்பிட்ட விரைவு ரயில்கள் செல்லும் பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில், வரும் மே 21, 24, 28, 31, ஜூன் 4, 7, 11, 14, 18, 21 ஆகிய தேதிகளில் நாகா்கோவிலிலிருந்து காலை 6.15 மணிக்குப் புறப்பட்டு மும்பை சிஎஸ்டி நிலையம் செல்லும் வாரம் இருமுறை இயங்கும் விரைவு ரயில் (எண்:16352) வழக்கமான பாதைக்குப் பதிலாக திருமால்பூா், மேலப்பாக்கம், திருத்தணி வழியாக இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக வரும் மே 22, 25, 29, ஜூன் 1, 5, 8, 12 ஆகிய தேதிகளில் மும்பை சிஎஸ்டி நிலையத்திலிருந்து இரவு 8.55 மணிக்குப் புறப்பட்டு நாகா்கோவில் செல்லும் விரைவு ரயில் (எண்:16351) வழக்கமான பாதைக்கு பதிலாக திருத்தணி, மேலப்பாக்கம், தக்கோலம், திருமால்பூா், காஞ்சிபுரம் ஆகிய நிலையங்கள் வழியாக இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.