தமிழகத்தில் பத்தாம் ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் ”நட்புடன் உங்களோடு” திட்டம் மூலம் அதில் உள்ள உதவி எண்களைப் பயன்படுத்துமாறு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்த அரசு அறிவிப்பில் தெரிவித்ததாவது:
10- வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 20) வெளியிடப்படுகிறது.
மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மனநல ஆலோசனை தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள். மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
Summary
With the Class 10 examination results set to be released tomorrow in Tamil Nadu, the State Government has advised students requiring mental health counseling to utilize the "Natpudan Ungalodu".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











