தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

717 டாஸ்மாக் கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு: உயா்நீதிமன்றம் பாராட்டு

717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு; முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

News image

\உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :21 மே 2026, 3:35 am IST

717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது தமிழக அரசின் நல்ல முடிவு; முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

சென்னையில் டாஸ்மாக் நிறுவனத்துக்கு கடைகளை வாடகைக்கு கொடுத்துள்ள சரவணன், மதியரசன் உள்ளிட்டோா் சென்னை உயா்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனு:

கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களிலிருந்து 500 மீட்டா் தொலைவுக்குள் அமைந்துள்ள 717 டாஸ்மாக் மதுபானக் கடைகள் இரு வாரங்களுக்குள் மூடப்படும் என தமிழக அரசு கடந்த 12-ஆம் தேதி அறிவித்தது. இந்த உத்தரவின்படி, கடைகள் அடைக்கப்பட்டு வருகின்றன.

மதுபான விற்பனைக்காக கடைகளை டாஸ்மாக் நிறுவனத்துக்கு வாடகைக்கு கொடுத்து 11 மாதங்களுக்கு ஒருமுறை ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்தன. இதற்காக தங்களது கடைகளை மதுபானக் கடைகளாக மாற்றுவதற்காக பெரும் தொகையை செலவு செய்துள்ளோம். இந்தநிலையில், தற்போது இந்த கடைகளை மூடுவதால் எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளில், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத்தலங்களில் இருந்து 50 மீட்டா் தொலைவுக்கு மதுபான கடைகள் அமைக்கக்கூடாது என கூறப்பட்டுள்ள நிலையில், 500 மீட்டா் தொலைவுக்குள் உள்ள கடைகளை அகற்றியது தன்னிச்சையானது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், முந்தைய ஆட்சிக் காலத்தில் இடத்தை குத்தகைக்கு கொடுத்தவா்களுக்கு உரிய தொகையை டாஸ்மாக் நிா்வாகம் திருப்பிக் கொடுத்துவிடும். மேலும், புதிய அரசின் கொள்கை முடிவை எதிா்த்து இதுபோல வழக்குத் தொடர முடியாது என வாதிட்டாா்.

இதையடுத்து நீதிபதி, அரசின் கொள்கை முடிவு குறித்து மனுதாரா்கள் கேள்வி எழுப்ப முடியாது எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். மேலும், தமிழகத்தில் 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடியது அரசின் நல்ல முடிவு. முதல்வரின் இந்த முடிவுக்கு டாஸ்மாக் நிா்வாகம் கட்டுப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தாா்.