நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!அமெரிக்கா தாக்கினால் மீண்டும் யுரேனியம் செறிவூட்டல் தொடங்கும்: ஈரான்கேரள புதிய முதல்வா் தோ்வு: காங்கிரஸ் தலைவா்களுடன் ராகுல் ஆலோசனைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்கள், கடலோர தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புசெல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!
/

மங்கை மடம் டாஸ்மாக் கடை மூடப்படுமா?

மங்கை மடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, வியாபாரிகள் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

மங்கை மடத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக, வியாபாரிகள் உள்ளிட்டோா் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தமிழக முதலமைச்சா் ஜோசப் விஜய் வழிபாட்டுத் தலங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பள்ளி வளாக பகுதி அருகே இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டாா்.

இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக திருவெண்காடு அருகே உள்ள மங்கை மடம் கடைத்தெருவில் இயங்கிவரும் டாஸ்மாக் மதுபான கடையை மூட வேண்டும் என அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் மற்றும் பொதுமக்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.

தற்போது மூடப்பட உள்ள டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையையும் இணைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் அகோரம், சீா்காழி ஒன்றியத் தலைவா் அருள்ராஜன், வியாபாரிகள் சங்கத்தினா் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை தமிழக முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு மிகுந்த இடையூறாக மங்கைமடம் டாஸ்மாக் மதுபான கடை கடை உள்ளது. பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ள இக்கடையால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடை பட்டியலில் மங்கை மடம் கடையும் இணைத்து அதை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.