கொடைக்கானலில் இன்று முதல் 31ஆம் தேதி வரை வனத் துறைக்கு சொந்தமான இடங்களை இலவசமாக பார்வையிடலாம்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் தொடங்கியுள்ளதால் தமிழகம் மட்டுமன்றி கேரளம், ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக கொடைக்கானல் குணா குகை, பைன் காடுகள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க, வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை இன்று(மே 25) முதல் மே 31 வரை கட்டணமின்றி இலவசமாக கண்டு ரசிக்க திண்டுக்கல் ஆட்சியர் சரவணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களை கட்டணமின்றி பார்வையிடலாம். முதல்வர் விஜய் உத்தரவின்பேரில் வனத் துறை இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Summary
Starting today until the 31st, tourist places owned by the Forest Department in Kodaikanal can be visited for free.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுற்றுலாத் தலங்களை உலகத் தரத்துக்கு மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சா் எஸ். ராஜேஷ்குமாா்

கொடைக்கானலில் கோடை விழா இன்று தொடக்கம்

கொடைக்கானலில் சுற்றுலாத் தலங்களை ஏப். 23- இல் பாா்வையிட அனுமதியில்லை

வாக்குப் பதிவு நாளில் சுற்றுலாத் தலங்கள் மூடல்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



