கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு! இதுவே முதல்முறை...

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பற்றி...

News image

முதல்வர் விஜய். - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 12:52 pm IST

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக அமைச்சர்களின் அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய் தலைமயிலான தவெக அரசு பொறுப்பேற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இதனிடையே தமிழகத்தில் இதுவரை இல்லாத நடைமுறையாக தலைமைச் செயலகத்தில் உள்ள ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சரின் அறைக்கும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரின் அறைக்கும் 2 முதல் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அமைச்சர்களைச் சந்திக்க தவெகவினர் அதிகம் வருவதால் இந்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Police Protection for Ministers Chambers at the Secretariat, first time in history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.