எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

‘டெட்’ தோ்ச்சிபெற்ற ஆசிரியா்களை நியமிக்க வேண்டும்: அன்புமணி

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை நியமிக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி இருப்பது குறித்து...

News image

அன்புமணி - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 10:46 am IST

சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் 2013-14 காலகட்டத்தில்தான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனா். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பெரிதளவில் நியமிக்கப்படவில்லை.

இன்றைய நிலையில், அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை கடந்த ஆட்சியில் நிரப்ப திமுக அரசு தவறிவிட்டது.

அதன் விளைவு அரசுப் பள்ளிகளில் 50,000-க்கும் கூடுதலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. எற்கெனவே, இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வில் சுமாா் 50,000 பேரும் வெற்றி பெற்று ஆசிரியா் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனா்.

தமிழக அரசுக்கு சமூகநீதியில் அக்கறையிருந்தால், 2018-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149 ரத்து செய்து விட்டு, தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி

Summary

Regarding Anbumani's insistence that individuals who have passed the eligibility test be appointed to vacant positions in government schools...

Summary

அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.