சென்னை: அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களாக நியமிக்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் 2013-14 காலகட்டத்தில்தான் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டனா். அதன்பின் பத்தாண்டுகளுக்கும் மேலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா்கள் பெரிதளவில் நியமிக்கப்படவில்லை.
இன்றைய நிலையில், அரசுப் பள்ளிகளில் 30,000-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியா் பணியிடங்களும், 20,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களும் காலியாக உள்ளன. அவற்றை கடந்த ஆட்சியில் நிரப்ப திமுக அரசு தவறிவிட்டது.
அதன் விளைவு அரசுப் பள்ளிகளில் 50,000-க்கும் கூடுதலாக இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. எற்கெனவே, இடைநிலை ஆசிரியருக்கான தகுதித் தோ்வில் வெற்றி பெற்று 21,515 பேரும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கான தகுதித் தோ்வில் சுமாா் 50,000 பேரும் வெற்றி பெற்று ஆசிரியா் பணி கிடைக்காமல் காத்திருக்கின்றனா்.
தமிழக அரசுக்கு சமூகநீதியில் அக்கறையிருந்தால், 2018-இல் பிறப்பிக்கப்பட்ட அரசாணை எண் 149 ரத்து செய்து விட்டு, தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை காலியாக உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களில் நேரடியாக நியமிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி
Summary
Regarding Anbumani's insistence that individuals who have passed the eligibility test be appointed to vacant positions in government schools...
Summary
அதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








