எம்எல்ஏக்கள் ராஜிநாமா! சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைக்கு அதிமுக எம்பி கோரிக்கை! தில்லியிலிருந்து புறப்பட்டார் முதல்வர் விஜய்! காங்கிரஸ் தலைவர்களை சந்திக்கவில்லை! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! பக்ரீத் பண்டிகை: தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை! 11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

பேரவையில் தவெகவுக்கு ஆதரவு ஏன்? அதிமுகவில் கருத்து வேறுபாடு ஏன்? எஸ்.பி. வேலுமணி பதில்!

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேட்டி...

News image

எஸ்.பி. வேலுமணி (கோப்புப் படம்) - x

Updated On :28 மே 2026, 12:11 pm IST

தவெகவுக்கு மக்கள் ஆதரவளித்ததாலும் திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையிலும் பேரவையில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"அதிமுக எங்கள் உயிர் மூச்சு. எங்களுடைய பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிதான். நானும் சி.வி. சண்முகமும் இணைந்து நாங்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தோம். அதேபோல மாவட்டச் செயலாளர்களும் கோரிக்கையை முன்வைத்தனர். அதன்படியே எடப்பாடி பழனிசாமியும் அந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவோம். தோல்வி பற்றி ஆராய்ந்து சரியான முறையில் கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். அதிமுக மீண்டும் ஆட்சியில் அமர வேண்டும். அதுதான் எங்களுடைய நோக்கம்.

நாங்கள் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்படவில்லை. மக்கள் தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள். அதனால் நாங்கள் தவெகவுக்கு ஆதரவளித்தோம். அதன்படியே முதல்வர் விஜய் எங்களை வந்து சந்தித்தார். திமுக எதிர்ப்பு என்ற அடிப்படையில்தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம். சி.வி. சண்முகமும் சரி, தவெக தரப்பிலும் சரி இதுபற்றி விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.

சி.வி. சண்முகம் உள்பட நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். தொண்டர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கருத்து வேறுபாடுகள் இருந்தது. எல்லாம் சரியாகிவிட்டது. நாங்கள் இணைந்து ஒற்றுமையாகவே முடிவெடுத்தோம். சி.வி. சண்முகம் முடிவுதான் எங்களுடைய முடிவு. தோல்வி பற்றி ஆராய வேண்டும், கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கருத்து வேறுபாடுகள் வந்தது" என்றார்.

'இப்போதும் தவெகவுக்குத்தான் ஆதரவா?' என்ற கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி 'தேவையுள்ள கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லிவிட்டேன்' என்று கூறிவிட்டுச் சென்றார்.

Summary

Why support TVK in tamilnadu Assembly, S.P. Velumani responds

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.