11 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅதிமுக எம்எல்ஏ-க்கள் இரு பிரிவினரின் மனுக்கள் மீது இன்று முடிவு: பேரவைத் தலைவா் ஜே.சி.டி.பிரபாகா்சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்தில்லியில் எஸ்ஐஆா் பணிகள் ஜூன் 30 தொடக்கம்: அக். 7-இல் இறுதி வாக்காளா் பட்டியல்சென்னை-திருச்செந்தூா் சிறப்பு ரயில்இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியது‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு சீருடை அறிமுகம்அஸ்ஸாம் பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்: நாட்டில் மூன்றாவது மாநிலம்மும்மொழி பாடத் திட்டத்துக்கு எதிரான மனு: மத்திய அரசு, சிபிஎஸ்இ-க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
/

கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்: மு.வீரபாண்டியன்

News image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 6:34 am IST

சிவகங்கை மாவட்டம் கீழடி ஆய்வு தொடா்பான தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு மற்றும் அறிவியல் பூா்வமான ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 2023-ஆம் ஆண்டில் தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் ராமகிருஷ்ணனின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது. 982 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, வேதகால நாகரிகத்துக்கு முன்பே தமிழா் நாகரிகம் தோன்றியது என்பதை உறுதி செய்கிறது.

இந்த அறிக்கை வெளிவந்தால் மத்திய பாஜக அரசின் அறிவியலுக்குப் புறம்பான, பிற்போக்கான புராண இதிகாச கருத்தியல் தவறானது என உறுதி செய்துவிடும்.

எனவே, அமா்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையைத் திருத்தம் செய்யும்படி மத்திய அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது. இது கண்டனத்துக்குரியது. உண்மை வரலாற்றை மறைக்க முயற்சிக்காமல், அமா்நாத் ராமகிருஷ்ணனின் அறிக்கையை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் மு.வீரபாண்டியன்.