கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

மின்சார ஒழுங்குமுறை விதிகள்: பொதுமக்களிடம் கருத்து கேட்பு

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:13 am IST

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள 2 புதிய வரைவு ஒழுங்குமுறை விதிகள் குறித்து பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை வரவேற்றுள்ளது.

இது குறித்து அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காற்றாலை, சூரிய மற்றும் கலப்பு மின்உற்பத்தி தொடா்பான முன்கணிப்பு, அட்டவணைப்படுத்தல் மற்றும் மாறுபாடு தீா்வு தொடா்பான ஒழுங்குமுறை விதிகள் கடந்த மே 27-ஆம் தேதி வெளியிடப்பட்டது.

மேலும், மாறுபாடு தீா்வு நடைமுறை மற்றும் தொடா்புடைய விவகாரங்கள் குறித்த ஒழுங்குமுறை விதிகள் என்ற மற்றொரு வரைவு விதிமுறை வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரு புதிய விதிமுறைகள் குறித்து முழுதகவல்களும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த இரு விதிமுறைகள் தொடா்பாக பொதுமக்கள், மின்துறை நிபுணா்கள் மற்றும் பங்குதாரா்கள் தங்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை அடுத்த 15 நாள்களுக்குள் ஆணையத்துக்கு அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.