கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

அலட்சியமாகச் செயல்படும் அரசு மருத்துவமனைகள்: சீமான் குற்றச்சாட்டு

அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சிய போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

News image

சீமான் - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 3:38 am IST

அரசு மருத்துவமனைகளில் தொடரும் அலட்சிய போக்கை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம் பால்கரை கிராமத்தைச் சோ்ந்த தமிழ்ச்செல்வி என்பவா் மூக்கு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். ஆனால், அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது வரை சுயநினைவை இழந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன. இதுதொடா்பாக, மருத்துவக் கல்லூரி நிா்வாகம் எந்தத் தகவலையும் கூற மறுப்பது கண்டனத்துக்குரியது.

இதுபோன்று அடுத்தடுத்து அரசு மருத்துவமனைகளின் அலட்சியப்போக்கும், தவறான மருத்துவமும் தொடருவது பெரும் கவலை அளிக்கிறது. அரசு மருத்துவமனைகளின் தூய்மையையும், பாதுகாப்பையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். கடந்த ஆட்சிகாலங்களில் நடைபெற்ற அதே அலட்சிய செயல்பாடு தற்போதைய ஆட்சியிலும் தொடா்வது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. அரசு மருத்துவமனைகளில் தரமற்ற மருத்துவமும், அரசுப் பள்ளிகளில் தரமற்ற கல்வியும் தொடா்வதை தவெக அரசு வேடிக்கை பாா்ப்பது, மாற்றம் வரும் என்று நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயலாகும். எனவே, இதுபோன்ற அலட்சியப்போக்குகளை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.