25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அமைச்சர் ரமேஷிடம் ரூ. 4,000 லஞ்சம் வாங்கிய திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள்!

திருச்செந்தூர் கோயில் அர்ச்சகர்கள் அமைச்சர் ரமேஷிடமே லஞ்சம் வாங்கியது பற்றி...

Thiruchendur Temple Minister Ramesh

முகமுடி அணிந்து கோயிலுக்குச் சென்ற அமைச்சர் ரமேஷ் - X

Published On :29 மே 2026, 12:19 pm IST

திருச்செந்தூர் கோயிலுக்கு ஆய்வு செய்யச் சென்ற தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷை சிறப்பு தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல ரூ. 4,000 லஞ்சமாக அர்ச்சகர்கள் வாங்கியுள்ளனர்.

முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அறநிலையத் துறை அமைச்சராக ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. ரமேஷ் பொறுப்பேற்றார்.

இவர், அறநிலையத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் பல்வேறு கோயில்களுக்குச் சென்று அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சிறப்பு தரிசனத்துக்காக பக்தர்களிடம் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வந்த நிலையில், இன்று அதிகாலை அமைச்சர் ரமேஷ் ஆய்வுப் பணிக்காகச் சென்றுள்ளார்.

கோயில் அறநிலையத் துறை அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், காரை கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டு, உதவியாளருடன் முகக்கவசம் அணிந்து கோயிலுக்குச் சென்றுள்ளார்.

தனது உதவியாளரை அனுப்பி, விரைவாக தரிசனம் செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர்கள், ஊழியர்களிடம் விசாரிக்க கூறியுள்ளார்.

இந்த நிலையில், அமைச்சர் என்று தெரியாமல் தலைக்கு ரூ. 1,000 என அமைச்சருடன் சேர்த்து மொத்தம் 4 பேருக்கு ரூ. 4,000 லஞ்சமாக கேட்டுள்ளனர். பணம் இல்லை எனக் கூறிய அமைச்சர், அர்ச்சகரின் ஜி-பேவுக்கு ரூ. 4,000 அனுப்பி, ஆதாரத்துடன் கையும் களவுமாகப் பிடித்துள்ளார்.

இந்த ஊழலில் கோயில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் ஈடுபடுவதை தெரிந்துகொண்ட அமைச்சர், கோயில் அலுவலகத்தில் விளக்கக் கடிதம் எழுதி வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, திருச்செந்தூர் கோயில் சொத்து, வருவாய் உள்ளிட்டவை அமைச்சர் ரமேஷ் ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வுப் பணிகள் நிறைவடைய நாளை பிற்பகல் ஆகும் எனத் தெரிகிறது.

தொடர்ந்து, திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் ஊழல்கள் தொடர்பாக துறைச் செயலாளரிடம் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகள் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Thiruchendur Temple Priests gets ₹4,000 Bribe from Minister Ramesh!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.