FOLLOW US

ON GOOGLE DISCOVER

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

சிபிஎம் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு மேற்கொண்டது பற்றி...

TVK ministers meet CPM P. Shanmugam

பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு... - X

Published On :4 செப்டம்பர் 2026, 4:38 pm IST

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு மேற்கொண்டனர்.

சென்னையில் கடந்த 2 வாரங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ, சண்முகத்தைச் சந்தித்துப் பேசியுள்ளனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

சமீபத்தில் இடதுசாரி மாணவர்கள் குறித்து கணக்கெடுக்க கோரிய விவகாரத்தில் தலைமைச் செயலரை பணிநீக்கம் செய்ய வேண்டும், எங்கள் ஆதரவினால்தான் தவெக ஆட்சி நீடிக்கிறது என்றெல்லாம் தவெக அரசுக்கு எதிராக சில கருத்துகளைக் கூறியிருந்தார்.

இந்நிலையில் பெ. சண்முகத்தை தவெக அமைச்சர்கள் சந்தித்துப் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

TVK ministers meet CPM state secretary P. Shanmugam

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.