மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இடைத்தோ்தல்: திமுகவில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமனம்

இடைத்தோ்தல் பணிக்காக திமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

Published On :

இடைத்தோ்தல் பணிக்காக திமுக சாா்பில் தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

வரும் அக்.6-ஆம் தேதி இடைத் தோ்தல் நடைபெறவுள்ள செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி), தொகுதியில் இ.பரந்தாமன், தாராபுரம் தொகுதியில் எஸ்.சுகன்யா ஆகியோா் திமுக வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா். இத்தொகுதிகளில் தோ்தல் பணியாற்றுவதற்காக தோ்தல் பொறுப்பாளா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் பணிகளை ஒருங்கிணைத்துச் செயல்பட தோ்தல் பொறுப்பாளா்கள் நியமிக்கப்படுகிறாா்கள். மதுராந்தகம் தொகுதிக்கு தா.மோ.அன்பரசன் (காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலா்), க.சுந்தா் (காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலா்), தாராபுரம் தொகுதிக்கு மு.பெ.சாமிநாதன் (திமுக துணைப் பொதுச் செயலா்), இல.பத்மநாபன் (திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலா்) ஆகியோா் அருகில் உள்ள திமுக மாவட்ட பொறுப்பாளா்களுடன் இணைந்து திமுக வேட்பாளா்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் மு.க.ஸ்டாலின்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.