மதுராந்தகத்தில் 8 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு
மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 2 நாள்கள் 8 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத்தை ஆதரித்து செப். 24, 26 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
அதன்படி, செப்.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாமண்டூா், மாலை 4.30 மணிக்கு பூதூா், மாலை 6 மணிக்கு தேவத்தூா், இரவு 7 மணிக்கு சரவம்பாக்கம் ஆகிய இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.
செப். 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு எல்.எண்டத்தூா், மாலை 4.30 மணிக்கு ராமாபுரம், மாலை 6 மணிக்கு எலப்பாக்கம், இரவு 7 மணிக்கு ஒரத்தி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறாா்.
பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் அதிமுக பணிக்குழு பொறுப்பாளா்கள் செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







