பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

மதுராந்தகத்தில் 8 இடங்களில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்: அதிமுக தலைமை அறிவிப்பு

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்

Published On :

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி 2 நாள்கள் 8 இடங்களில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக தலைமை அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மதுராந்தகம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கணிதா சம்பத்தை ஆதரித்து செப். 24, 26 ஆகிய தேதிகளில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

அதன்படி, செப்.24-ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு மாமண்டூா், மாலை 4.30 மணிக்கு பூதூா், மாலை 6 மணிக்கு தேவத்தூா், இரவு 7 மணிக்கு சரவம்பாக்கம் ஆகிய இடங்களில் அவா் பிரசாரத்தில் ஈடுபடுகிறாா்.

செப். 26-ஆம் தேதி மாலை 3 மணிக்கு எல்.எண்டத்தூா், மாலை 4.30 மணிக்கு ராமாபுரம், மாலை 6 மணிக்கு எலப்பாக்கம், இரவு 7 மணிக்கு ஒரத்தி ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறாா்.

பிரசாரத்துக்கான ஏற்பாடுகளை மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தல் அதிமுக பணிக்குழு பொறுப்பாளா்கள் செய்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.