மதுரையில் ஒரே நாளில் பெண் உள்பட மூவா் வெட்டிக் கொலைஇன்று விநாயகா் சிலை ஊா்வலம்: சென்னையில் 23,000 போலீஸாா் பாதுகாப்புபட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் திட்டத்துக்கு தடை கோரி வழக்கு!மானிய வீட்டு உபயோக சிலிண்டருக்கு அக்.1 முதல் பயோமெட்ரிக் ஆதாா் சரிபாா்ப்பு கட்டாயம்! ‘சூப்பா் எல் நினோவால்’ இந்தியாவுக்கு கடும் பாதிப்பு: விஞ்ஞானிகள் எச்சரிக்கைஒரே இடத்தில் 5 ஆண்டுகள் பணியாற்றினால் இடமாற்றம்: தமிழக அரசு நடவடிக்கை

ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவானது தொடர்பாக...

சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் பயணிகள்.’

Published On :

ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வானிலை நிலவரங்களை அவ்வபோது சமூக ஊடகங்களில் வெளியிடும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருப்பதாவது:

”கடந்த 2024 ஆம் ஆண்டு ஃபென்ஜால் (Fengal) புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது.

உள்மாவட்டங்களில் இன்று(செப். 20) நல்ல மழைப்பொழிவு காத்திருக்கிறது. திருச்சி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, பெரம்பலூர், அரியலூர், வேலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்பட உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

தென் தமிழகத்தைப் பொருத்தவரை வழக்கம்போல மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்யும். பெங்களூரில் இன்று கனமழை பெய்யும்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடந்த 2 நாள்களாக மழை மேகங்கள் மிக அருகில் வந்தும், துரதிர்ஷ்டவசமாக அவற்றைத் தவறவிட்டு வருகிறது. இதற்கிடையில் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இந்த மழைப் பொழிவில் இணையும் என்று நம்புவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Private weather blogger Pradeep John has reported that extremely heavy rainfall has been recorded in Krishnagiri district following Cyclone Fengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.