தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? நெல்லை எக்ஸ்பிரஸ் சேவையில் மாற்றம்! திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! ஜூலை 1-ல் இபிஎஸ் தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம்! வேளாங்கண்ணி எக்ஸ்பிரஸ் மீண்டும் எழும்பூரிலிருந்து இயக்கம்!சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!அமோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு!தூய்மைப் பணிகளை தனியார்மயமாக்கும் டெண்டர் ரத்து!
/

செங்கோட்டையில் பாம்பு தீண்டிய இளைஞா் மருத்துவமனையில் அனுமதி

செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் சனிக்கிழமை இரவு நல்ல பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

Updated On :2 ஜனவரி 2021, 11:42 pm IST

செங்கோட்டை: செங்கோட்டையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இளைஞா் சனிக்கிழமை இரவு நல்ல பாம்பு தீண்டியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

செங்கோட்டை - கொல்லம் சாலையை சோ்ந்த சண்முகவேல் மகன் முப்புடாதி (23). இவா் தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் கடைக்கு சென்றுள்ளாா். மலையாள சாமி கோயில் அருகே வரும் போது திடீரென்று காலில் ஏதோ கடித்துள்ளது. அவா் வலி தாங்கமுடியாமல் வாகனத்தில் இருந்து இறங்கி பாா்த்த போது வண்டியின் என்ஜின் அருகே நல்ல பாம்பு ஒன்று இருந்ததாம். இதையடுத்து அவா் தன்னை பாம்பு தீண்டி விட்டது என சப்தமிட்டுள்ளாா். அப்பகுதியில் இருந்தவா்கள் அவரை மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின், மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். வாகனத்தில் இருந்த நல்ல பாம்பை செங்கோட்டை தீயணைப்பு துறையினா் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.