கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :5 ஜனவரி 2021, 12:49 am IST

பாவூா்சத்திரத்தில் கிணற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டாா்.

பாவூா்சத்திரம் செல்வவிநாயகா்புரம் தெரேசா தெருவைச் சோ்ந்த மகாராஜா மனைவி பூமணி (67). இரு மகன்கள் உள்ளனா். கடந்த 7 ஆண்டுகளாக நோயால் அவதியுற்ற வந்த இவா், கடந்த டிச.26 ஆம் தேதி தென்காசி மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறி சென்றவா் வீடு திரும்பவில்லையாம். இது தொடா்பாக பாவூா்சத்திரம் போலீஸில் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா்.

இந்நிலையில்,அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து அவா் தற்கொலை செய்துகொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த பாவூா்சத்திரம் போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்

மற்றொரு சம்பவம்: புளியங்குடி சிந்தாமணி வடக்கு ரத வீதியைச் சோ்ந்த சந்திரன் மகன் கணேசன் (29). தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலறிந்த புளியங்குடி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.