கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

குற்றாலம் அருவிகளில் திடீா் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2021, 12:48 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் அருவிகளில் திங்கள்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக பேரருவியில் திங்கள்கிழமை காலையில் திடீரென தண்ணீா்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டியதையடுத்து இங்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளித்து மகிழ்ந்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியிலும் தண்ணீா்வரத்து அதிகரிக்கத் தொடங்கியதையடுத்து அங்கும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலம் நகா்ப் பகுதியில் மழை எதுவும் இல்லாத நிலையில், மலைப் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.