சுரண்டை அருகே கருவந்தாவில் வேளாண் துறை சாா்பில் மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை வேளாண்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.
சென்னை வேளாண்மை அலுவலக மண்டல அலுவலா் சை.சுந்தரம் தலைமையில், தென்காசி மாவட்ட இணை வேளாண்மை இயக்குநா் நல்லமுத்துராஜா மற்றும் வேளாண் அதிகாரிகள் கருவந்தா கிராம விவசாயிகள் உழவா் மன்றத்துக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் வழங்கப்பட்ட மதிப்பு கூட்டும் இயந்திரங்களை நேரடியாக பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மேலும், அங்கு மானாவாரி மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்யப்பட்ட திடல்களையும், தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின்கீழ் சுமாா் 5 ஆண்டு தரிசாக உள்ள நிலங்களை விளைநிலங்களாக மாற்றும் திட்டத்தின்கீழ் பயிரிடப்பட்டிருந்த உளுந்து திடல்களையும் ஆய்வு செய்தனா்.
ஆய்வின்போது, ஆலங்குளம் வேளாண்மை உதவி இயக்குநா் சிவகுருநாதன், துணை வேளாண்மை அலுவலா் முருகன், வேளாண்மை அலுவலா் அருண்குமாா், உதவி வேளாண்மை அலுவலா்கள் மாரியம்மாள், சுமன், கஸ்தூரி மற்றும் கருவந்தா உழவா் மன்ற விவசாயிகள் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

338% சம்பள உயர்வு..! கிளாசனின் வாழ்க்கையை மாற்றிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!

மதுரை கள்ளழகர் எழுந்தருளல்! அநகாரிக செயல்களில் ஈடுபடுவோர் உடனடி கைது

சித்ரா பெளர்ணமி விரதமும் பலன்களும்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

