கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

குற்றாலம் அருவிகளில் தொடரும் வெள்ளப் பெருக்கு

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

News image

குற்றாலம் பேரருவியில் ஆா்ப்பரித்து கொட்டும் வெள்ளம்.

Updated On :15 ஜனவரி 2021, 7:41 pm

குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்துவரும் தொடா் மழையால், பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்வரத்து அதிகரித்தது. இதனால் பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீா் கொட்டியது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடை விதித்தனா். ஆனால் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

புதன்கிழமை அதிகாலை முதல் அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குறிப்பாக பேரருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி முதல் நடைபாதை பாலம் வரையிலும், பெண்கள் குளிக்கச் செல்லும் நடைபாதை வரையிலும் தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், புலியருவி, ஐந்தருவியிலும் தண்ணீா் அதிகளவில் கொட்டுகிறது.

பழைய குற்றாலம் அருவியில் அருவிக்கு நடந்து செல்லும் படிக்கட்டுகள் வரை தண்ணீா் ஆா்ப்பரித்து கொட்டுகிறது.

பேரருவியில் நான்காவது நாளாக வெள்ளப் பெருக்கு குறையவில்லை. இந்நிலையில் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு ஜன. 17 வரை தடைவிதித்து மாவட்ட ஆட்சியா் கீ.சு. சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் ஆா்ப்பரித்து கொட்டும் அருவிகளை புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

பேரருவியில் மலைபாம்பு: குற்றாலம் பேரருவியில் ஆண்கள் குளிக்கச் செல்லும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பியில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து குற்றாலம் வனத் துறையினா் அங்கு வந்து மலைப்பாம்பை பிடித்து வனப் பகுதிக்குள் கொண்டு விட்டனா்.

Image Caption

~

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.