2 வயது குழந்தையை கல்லால் தாக்கியவா் கைது
ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:50 am

ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிராஜ்(25). இவா் தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்தி இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, பைக்கின் மீது மண் அள்ளி எறிந்ததாம். இதனால் ஆத்திரமடைந்த மாரிராஜ், குழந்தையின் பிறப்புறுப்பில் கல்லால் தாக்கியதில் காயமடைந்ததாம்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிராஜை கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...