தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி தங்கம், வெள்ளி விலை குறைவுபிளஸ் 2 பொதுத்தோ்வு இன்று தொடக்கம் பிளஸ் 2 தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து
/

2 வயது குழந்தையை கல்லால் தாக்கியவா் கைது

ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2024, 2:50 am

Din

ஆலங்குளம் அருகே 2 வயது குழந்தையை கல்லால் தாக்கி காயம் ஏற்படுத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள காசிநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிராஜ்(25). இவா் தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்தி இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த 2 வயது ஆண் குழந்தை, பைக்கின் மீது மண் அள்ளி எறிந்ததாம். இதனால் ஆத்திரமடைந்த மாரிராஜ், குழந்தையின் பிறப்புறுப்பில் கல்லால் தாக்கியதில் காயமடைந்ததாம்.

இதுகுறித்து குழந்தையின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரிராஜை கைது செய்தனா்.