சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

குற்றாலம் சாரல் திருவிழாவில் ஆணழகன், பளுதூக்குதல் போட்டி

குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆணழகன், வலுதூக்குதல், பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.

News image

ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசு வழங்குகிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Updated On :18 ஆகஸ்ட் 2024, 8:30 pm

Din

குற்றாலம் சாரல் திருவிழாவின் 3ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை ஆணழகன், வலுதூக்குதல், பளுதூக்குதல் போட்டிகள் நடைபெற்றன.

தென்காசி மாவட்ட நிா்வாகம்- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் குற்றாலம் கலைவாணா் கலையரங்கில் நடைபெற்ற வலு தூக்குதல், பளு தூக்குதல், ஆணழகன் போட்டிகளை மாவட்ட

ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் தொடங்கிவைத்தாா்.

வலு தூக்கும் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சாா்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோரும், பளு தூக்கும் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகளும் கலந்துகொண்டனா்.

ஆணழகன் போட்டியில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூக்துக்குடி, மதுரை, கோவை, தென்காசி

மாவட்டங்களை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட வீரா்கள் கலந்துகொண்டு கட்டழகை வெளிப்படுத்தினா்.

மூன்று போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரா்களுக்கு ஆட்சியா் பரிசுகளை வழங்கினாா்.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி கோட்டாட்சியா் லாவண்யா, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலா் சுஷமா, பேரூராட்சி சுகாதார அலுவலா் ராஜ கணபதி, மாவட்ட விளையாட்டு - இளைஞா் நலன் அலுவலா் ந.ஆ.ஜெயரத்தினராஜன், பாரத் உடற்பயிற்சி கழக நிறுவனா் குத்தாலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.