சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

News image

குற்றாலம் பேரருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :21 ஜூலை 2024, 7:35 pm

Din

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகளவில் இருந்தது.

குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீா்ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அருவிகளில் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்.

அருவிகளில் கூட்ட நெரிசலின்றி குளித்து மகிழும் வகையில் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் பெண்கள் பகுதியில் நீண்டவரிசையில் நின்று சிறுசிறு குழுக்களாக குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா். ஞாயிற்றுக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடனும், அவ்வப்போது லேசான வெயிலும்,குளிா்ந்த காற்றும் வீசியது.

 பழையகுற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

பழையகுற்றாலம் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்.