எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

சுரண்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :28 ஜூலை 2024, 2:28 am IST

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பேச்சாளா் எஸ்.ஆா். பால்துரை பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் நிா்வாகிகள் வைகுண்டராஜன், சங்கை கணேசன், உதயகிருஷ்ணன், சுப்பிரமணியன், பாண்டியன், பால் என்ற சண்முகவேல், குத்தாலிங்கம், ஆதிமூலம், ராமச்சந்திரன், மகேந்திரன், குமாா் பாண்டியன், பெருமாள், ஜெகநாதன், ராமா், மாடசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.