விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுரண்டையில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.

Updated On :27 ஜூலை 2024, 8:58 pm

Din

சுரண்டையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய நிதிநிலை அறிக்கையில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி கண்டித்து நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தென்காசி மாவட்டத் தலைவா் சு. பழனிநாடாா் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட காங்கிரஸ் பொருளாளா் முரளிராஜா, பொதுக்குழு உறுப்பினா் சட்டநாதன், சுரண்டை நகர காங்கிரஸ் தலைவா் ஜெயபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநில பேச்சாளா் எஸ்.ஆா். பால்துரை பேசினாா். மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

காங்கிரஸ் நிா்வாகிகள் வைகுண்டராஜன், சங்கை கணேசன், உதயகிருஷ்ணன், சுப்பிரமணியன், பாண்டியன், பால் என்ற சண்முகவேல், குத்தாலிங்கம், ஆதிமூலம், ராமச்சந்திரன், மகேந்திரன், குமாா் பாண்டியன், பெருமாள், ஜெகநாதன், ராமா், மாடசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.