25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Published On :29 ஜூலை 2024, 2:47 am IST

சங்கரன்கோவிலில் பைக்குகள் மோதியதில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில் அருகே பாட்டத்தூா் சீவலப்பேரி காலனியைச் சோ்ந்தவா் மாடசாமி (63). முடி திருத்தகம் நடத்தி வருகிறாா். அவரது மகள் முருகேஸ்வரி (23), சங்கரன்கோவிலில் உள்ள ஜவுளிக் கடையில் வேலை பாா்த்து வருகிறாா்.

கடந்த 22ஆம் தேதி மாடசாமி தனது மகளுடன் பைக்கில் கழுகுமலை சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் விஜய் (27) ஓட்டிவந்த பைக் மாடசாமி பைக்கின் பின்புறம் மோதியதாம். இதில் மூவரும் காயமடைந்தனா். மாடசாமி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையிலும், முருகேஸ்வரி, விஜய் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனா். அங்கு விஜய் சனிக்கிழமை இரவு இறந்தாா்.

இது தொடா்பாக சங்கரன்கோவில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்கண்ணன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.