மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

தென்காசியில் இன்று காவல்துறை வாகனங்கள் ஏலம்

தென்காசியில் இன்று காவல்துறை வாகனங்கள் ஏலம்

Updated On :1 மார்ச் 2024, 6:30 pm

தென்காசி மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட அரசு வாகனங்கள் சனிக்கிழமை (மாா்ச்2) பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்ட காவல்துறையில் கழிவுசெய்யப்பட்ட அரசு வாகனங்கள் குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 3 இருசக்கர வாகனங்களும் 1 நான்கு சக்கர வாகனமும் இடம்பெறுகின்றன. ஏலம் எடுக்க விரும்புவோா் இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5000 முன்பணம் செலுத்தி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவா்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடா்பான சந்தேகங்களுக்கு என்ற 7305543727, 949812345 8192345 செல்லிடப்பேசி எண்களை தொடா்பு கொள்ளலாம். வாகனத்தை ஏலம் எடுத்தவா்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளாா்.