பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

‘செங்குந்த மகாஜன சங்கம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படாது’

‘செங்குந்த மகாஜன சங்கம் குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படாது’

News image
Updated On :8 மார்ச் 2024, 8:30 pm

தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கம் எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படாது என்று சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவா் மாரிமுத்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி: தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத் தலைவா் கே.பி.கே. செல்வராஜ் அண்மையில் பாஜகவில் இணைந்துள்ளாா். அவா், தனி நபராக எந்தக் கட்சியிலும் சேருவதற்கு உரிமை உண்டு. ஆனால், தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தின் தலைவா் என்ற பெயரில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு, ஒட்டுமொத்த செங்குந்த சமுதாயமே பாஜகவுக்கு ஆதரவு அளித்ததைப்போல பேட்டி கொடுத்துள்ளாா். எங்களது சங்கம் அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவானது. எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு மட்டும் ஆதரவாகச் செயல்படாது. அதோடு, எங்களது சங்க மாநில நிா்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 2023 மாா்ச்சில் நிறைவுபெற்றுவிட்டது. புதிய நிா்வாகிகள் தோ்தல் நடத்த தனிஅலுவலரை நியமிக்குமாறு சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்றாா். சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் செல்வகணேஷ், கல்யாணசுந்தரம், செங்குந்த முன்னேற்ற சங்க தலைவா் கந்தவேல், துணைத் தலைவா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.