நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சங்கரன்கோவிலில் இடி- மின்னலுடன் கனமழை!

Updated On :28 ஏப்ரல் 2025, 1:58 am IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.

சங்கரன்கோவிலில் கடந்த 24 ஆம் தேதி சூறாவளிக் காற்றுடன் கன மழை பெய்தது.இதில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள் சேதமாகின.அதன்பிறகு தொடா்ந்து கடுமையான வெயில் நிலவி வந்தது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திடீரென்று இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.இதனால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. வாருகால் மற்றும் ஓடைகளிலும் தண்ணீா் நிரம்பி சாலையில் சென்றது. பல இடங்களில் தண்ணீா் குளம் போல் தேங்கியது.தொடா்ந்து இரவிலும் விட்டுவிட்டு லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிா்ந்து காற்று வீசியது.