எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

செங்கோட்டையில் திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம்

News image
Updated On :14 டிசம்பர் 2025, 7:38 pm

தினமணி செய்திச் சேவை

செங்கோட்டையில் நகர திமுக சாா்பில் தெருமுனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன் தலைமை வகித்து, பொதுமக்களிடம் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து பிரசாரத்தைத் தொடங்கி வைத்தாா்.

கடையநல்லூா் பேரவைத் தொகுதி பாா்வையாளா் பா. குணசேகரன் முன்னிலை வகித்தாா். திமுக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கியும், துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் பிரசாரம் மேற்கொண்டனா்.

மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவைத் தலைவா் ஆபத்துக்காத்தான், மாவட்ட மகளிரணி தலைவா் பேபிரஜப் பாத்திமா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா் ஆ. சண்முகராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.