மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

தென்காசி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :15 டிசம்பர் 2025, 10:59 pm

Syndication

தென்காசி அருகே கைப்பேசி கோபுரத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

கடையநல்லூா், செவல்விளை பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் ஜெயக்குமாா் (30). இவா் குத்துக்கல்வலசையில் தாயுடன் வசித்து வந்தாா். இவரது தந்தை ஏற்கெனவே இறந்துவிட்டாா். இவா், வேலை கிடைக்காத, திருமணமாகாத விரக்தியால் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இவா் திங்கள்கிழமை மாலை இலத்தூா் விலக்கு பகுதியில் உள்ள கைப்பேசி கோபுரத்தில் ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இலத்தூா் போலீஸாா் ஜெயக்குமாரின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இது குறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].