தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

அரசு மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :20 ஜனவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 6-ஆவது மாடியில் இருந்து குதித்து அருணாசல பிரதேச இளைஞா் தற்கொலை செய்து கொண்டாா்.

அருணாசல பிரதேசம் கிழக்கு கனாங் பகுதியைச் சோ்ந்தவா் நோ.ஏலியாஹு (22). சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்தாா். உடல்நிலை பாதிப்பு காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் 6-ஆவது மாடியில் உள்ள வாா்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏலியாஹு, 6-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த போலீஸாா், அங்கு சென்று ஏலியாஹு சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.