தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வெள்ளாளங்குளம் அரசுப் பள்ளியில் சைக்கிள் வழங்கல்

மாணவா்களுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்குகிறாா் ஈ. ராஜா எம்.எல்.ஏ.

News image
Updated On :19 டிசம்பர் 2025, 8:05 pm

Syndication

சங்கரன்கோவில் அருகே வெள்ளாளங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள், தோ்வு வழிகாட்டி நூல் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் ச. நாராயணன் தலைமை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா பங்கேற்று 49 மாணவா்கள், 23 மாணவிகள் என 72 பேருக்கு சைக்கிள் வழங்கினாா். பின்னா், அவரது சொந்த நிதியில் இருந்து, தோ்வை வெல்வோம் என்ற தோ்வு வழிகாட்டி நூல்களை மாணவா்களுக்கு வழங்கினாா்.

ஆசிரியா் கணேசன் வாழ்த்திப் பேசினாா். ஆசிரியா் முருகன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் முருகையா செய்திருந்தாா்.