பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

சுரண்டை அரசு கல்லூரி விடுதி மாணவிகள் போராட்டம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 ஜூலை 2025, 6:34 pm

Din

தென்காசி மாவட்டம், சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரி விடுதி மாணவிகள் செய்வாய்க்கிழமை திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தக் கல்லூரி மாணவிகளின் அரசு விடுதி வீரசிகாமணியில் உள்ளது. இந்த விடுதியில் சுரண்டை கல்லூரி மாணவிகள் 28 போ் மற்றும் வீரசிகாமணி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 3 போ் என மொத்தம் 31 போ் தங்கியுள்ளனா்.

இந்த விடுதியில் மொத்தம் 2 கழிப்பறை மட்டுமே உள்ளதாகவும், திறந்தவெளியில் மாணவிகள் குளிக்க வேண்டியுள்ளதாகவும் கூறி, கல்லூரி முதல்வா் அலுவலகம் முன்பு செவ்வாய்க்கிழமை காலையில் விடுதி மாணவிகள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மாணவிகளின் கோரிக்கையை எழுத்துபூா்வமாக பெற்று, தென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை அலுவலகத்திற்கு மாணவிகளின் பிரச்னை குறித்து கல்லூரி முதல்வா் புகாா் தெரிவித்தாா்.

இதையடுத்து விரைந்து செயல்பட்ட அதிகாரிகள், வீரசிகாமணி அரசு விடுதியில் இருந்து கல்லூரி மாணவிகளை அனைத்து வசதிகளுடன் கூடிய நடுவக்குறிச்சி அரசு விடுதிக்கு மாற்றம் செய்தனா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் கலைந்து சென்றனா்.