ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகம்: 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

News image

சிவபக்தா் வைரமுத்து.

Updated On :22 மார்ச் 2025, 11:59 pm

Din

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் 50 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அருள்தரும் ஸ்ரீஉலகம்மன் உடனுறை அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாத சுவாமி திருக்கோயில் புனராவா்த்தன ரஜதபந்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஏப்.7-ஆம் தேதி நடைபெறுகிறது.

கும்பாபிஷேக தினத்தன்று காலை 7 மணி முதல் இரவு வரை பக்தா்களுக்கு, சிவகாசி சிவபக்தா்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்படவுள்ளது. இதற்காக தென்காசி தெப்பக்குளம் பகுதியில் தற்காலிக உணவு அருந்தும் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவபக்தா் வைரமுத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது: கும்பாபிஷேக தினத்தன்று 50ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதுதொடா்பாக காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறைக்கு அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளோம் என்றாா்.