மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

News image

மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்... - (கோப்புப் படம்)

Updated On :12 ஏப்ரல் 2026, 8:09 pm

தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறன் வாக்காளா்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.