தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறன் வாக்காளா்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

9,159 மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்தும் பணி தொடக்கம்

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இல்லத்துக்கு சென்று வாக்கு சேகரிப்பு

திருப்பத்தூா்: 2,170 போ் தபால் வாக்கு செலுத்த விருப்பம்

9 தொகுதிகளில் 38,733 வாக்காளா்களுக்கு வீடு தேடி விண்ணப்பம்: முதியோா், மாற்றுத்திறனாளிகள் என்ற வகையில் வழங்கப்படும்
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


