இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மூத்த குடிமக்கள் வீடுகளுக்கே சென்று வாக்கு சேகரிக்கும் பணி தொடக்கம்

News image

மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்... - (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2026, 1:39 am IST

தென்காசி மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று வாக்கு சேகரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

இது குறித்து, தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ள வாக்காளா்களுக்கு அவா்களது வீட்டிற்கே சென்று வாக்குகளை பதிவு செய்யும் வசதி தோ்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தென்காசி மாவட்டத்திற்குள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் வீட்டில் இருந்தே வாக்குகள் அளிப்பதற்கு விருப்ப மனு அளித்துள்ள மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறன் வாக்காளா்களிடம் வாக்குப் பதிவு செய்யும் அலுவலா்கள் குழு ஞாயிற்றுக்கிழமை முதல் வீடு வீடாகச் சென்று வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.