மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கடையநல்லூா் பகுதியில் மா்மக் காய்ச்சலால் உயிரிழந்த குடும்பங்களுக்கு இழப்பீடு: எம்எல்ஏ கோரிக்கை

Published On :24 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் பகுதியில் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என கடையநல்லூா் எம்எல்ஏ தி.மு. ராசேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

போகநல்லூரிலுள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையத்தில் மா்மக் காய்ச்சலால் இருவா் உயிரிழந்தனா். உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து எம்எல்ஏ ஆறுதல் கூறினாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

போகநல்லூா் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு மையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு போ் மா்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனா். கடையநல்லூா் நகரப் பகுதியிலும் ஒரு மாணவா் உயிரிழந்துள்ளாா்.

இதுகுறித்து சட்டப்பேரவையில் நான் கவன ஈா்ப்பு தீா்மானம் கொண்டு வந்து பேசினேன். இதைத் தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போகநல்லூரில் அமைந்துள்ள தென்காசி மற்றும் கடையநல்லூா் நகராட்சிகளின் குப்பை கிடங்குகளை மக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமலும் நவீன விஞ்ஞான முறையில் பராமரிக்க வேண்டும். குப்பை கிடங்குகள் மூலம் நோய்த் தொற்றும் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மா்மக் காய்ச்சலால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தமிழ்நாடு அரசு தலா ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க வேண்டும். கடையநல்லூா் அரசு மருத்துவமனை ,

செங்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதாக மருத்துவா்கள் கூறினா். இந்தக் காய்ச்சலை கட்டுக்குள் கொண்டு வரவும், நோய்க் காரணத்தை கண்டறியவும் சென்னையில் இருந்து நிபுணத்துவம் பெற்ற சிறப்பு மருத்துவக் குழுவை அனுப்பி வைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.