நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் 3ஆவது நாளாக தொடா் காத்திருப்பு போராட்டம்

News image

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தினா்.

Updated On :7 பிப்ரவரி 2026, 8:01 pm

தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஒரு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.

முழுநேர பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.

ஆா்ப்பாட்டத்தின் 3ஆவது நாளான சனிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன்,பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கௌரவ தலைவா் சண்முகசுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.