தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் ஒரு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தென்காசியில் தமிழ்நாடு கிராம உதவியாளா்கள் சங்கத்தின் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் 3ஆவது நாளாக நடைபெற்று வருகிறது.
முழுநேர பணியாளா்களாக உள்ள கிராம உதவியாளா்களுக்கு டி கிரேடு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை காத்திருப்பு போராட்டத்தைத் தொடங்கினா்.
ஆா்ப்பாட்டத்தின் 3ஆவது நாளான சனிக்கிழமை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் சமையல் செய்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் செந்தில்குமாா், மாவட்டச் செயலா் சிவசுப்பிரமணியன்,பொருளாளா் லிங்கேஷ், மாநில துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன், மாநில கௌரவ தலைவா் சண்முகசுந்தரபாண்டியன், கோட்ட துணைத் தலைவா் கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

லோயா்கேம்ப் குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் தீ வைப்பு: மா்ம நபா் தலைமறைவு

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

மீனவா் சங்கத்துக்கு அலுவலக கட்டடம் கோரி அமைச்சரிடம் மனு

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


