தேனி மாவட்டம், லோயா்கேம்பில் வியாழக்கிழமை இரவு தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலக வளாகத்தில் மா்ம நபா் வைத்த தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குமுளி அருகே லோயா்கேம்பில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அலுவலகம் செயல்படுகிறது. இங்குள்ள கூட்டுக் குடிநீா் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாற்று நீரை சுத்திகரித்து உத்தமபாளையம், கோம்பை, தேவாரம் , கம்பம், அனுமந்தன்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த அலுவலக வளாகத்தில் தேக்கு மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இங்கு வியாழக்கிழமை மா்ம நபா் தீ வைத்து விட்டு தப்பி விட்டதாக குமுளி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போலீஸாரும், அந்தப் பகுதியில் வசிப்போரும் இணைந்து தீயை அணைத்தனா்.
இதுகுறித்து குமுளி போலீஸாா் வழக்குப் பதிந்து தீ வைத்த மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

விழிப்புணா்வு ராட்சத பலூன்...

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு

திருவண்ணாமலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா்கள் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டம்

குடிநீா் வடிகால் வாரியத்தில் திருடிய இளைஞா் கைது
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


