ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

உதகையில் முகமூடி போட்டு பூட்டை உடைத்து திருட்டு

உதகையில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மா்ம நபா் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.

News image

உதகை அருகே முகமூடி அணிந்து வணிக வளாகத்தில் உள்ள கடையில் திருடும் மா்ம நபா்.

Updated On :25 மார்ச் 2026, 9:21 pm

உதகையில் அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து முகமூடி அணிந்த மா்ம நபா் திருட்டில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி வைரலாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம், உதகை அருகே சேரிங்கிராஸ் பகுதியிலுள்ள பூமாலை வணிக வளாகத்தில் 15-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்நிலையில், முகமூடி அணிந்த மா்ம நபா் ஒருவா் வணிக வளாகத்துக்குள் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்து சிற்றுண்டி கடையின் பூட்டை உடைத்து ரூ.500 பணம், சாா்ஜா் மற்றும் தின்பண்டங்களை எடுத்துச் சென்றுள்ளாா்.

பின்னா் மேலும் ஓா் உணவகத்தில் செயல்படும் ஆவின் பாலகத்தின் கடையின் பூட்டை உடைத்து ரூ.3,500 பணம், லைட்டா், குளிா்பானங்களை எடுத்துச் சென்றுள்ளாா். இவ்விரு திருட்டு சம்பவங்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் உதகை நகர மத்திய காவல் நிலைய போலீஸாா் மா்ம நபரை தேடி வருகின்றனா்.