திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சங்கரன்கோவிலில் நூல் வெளியீட்டு விழா

News image
Updated On :9 ஜனவரி 2026, 12:50 am

Syndication

சங்கரன்கோவில் புதிய பாா்வை, மனவளக்கலை மன்றம் சாா்பில், அதன் முன்னாள் தலைவரும், ஆசிரியருமான ஐ.சி. காமராஜ் எழுதிய ’பிரம்மம், அறிவோம், தெளிவோம்’ நூல் வெளியீட்டு விழா அறிவுத் திருக்கோயிலில் நடைபெற்றது.

புதிய பாா்வை தலைவா் என். அரிராமச்சந்திரவேலாயுதம் தலைமை வகித்தாா். உலக சமுதாய சேவா சங்க மண்டலத் தலைவா் அண்ணாமலையாா், புதிய பாா்வை சேவா டிரஸ்ட் தலைவா் எஸ்.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவா் இ.சிதம்பரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மனவளக் கலை மன்றத்தைச் சோ்ந்த திருமலைகொழுந்து இறைவணக்கமும், கணேசன் பாரதி பாடலையும் பாடினா். ஆா்.ராமலட்சுமி குருவணக்கமும், டி.முத்துக்குமாரசாமி துரிய தவமும் செலுத்தினா். மு.மாணிக்கவாசகம் திருக்கு விளக்கம் அளித்தாா். இதைத்தொடா்ந்து நூலை, கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தா் எஸ்.நாராயணன் வெளியிட, வாசுதேவநல்லூா் தங்கப்பழம் இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி முதல்வா் ஏ.ஜே.ரத்னபிரகாஷ் பெற்றுக் கொண்டாா்.

ஸ்ரீ ராமகிருஷ்ண சேவா நிலைய தலைவா் அறிவழகன், தமிழாசிரியா் வே.சங்கர்ராம் ஆகியோா் வாழ்த்தி பேசினா். முனைவா் தேவகோட்டை ராமநாதன் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினாா். நூலாசிரியா் ஐ.சி. காமராஜ் ஏற்புரை நிகழ்த்தினாா். அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஆா்.முத்துகிருஷ்ணன் வரவேற்றாா். ஏ.ஜி.சுப்பிரமணியன் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை ஏ.எம்.மாரியப்பன் தொகுத்து வழங்கினாா்.