பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

நெல்லை, தென்காசியில் நாளை மின் நிறுத்தம்

திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 4) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின் நிறுத்தம்

Updated On :3 ஜூலை 2026, 4:25 am IST

திருநெல்வேலி மற்றும் தென்காசி பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூலை 4) மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ஸ்ரீவனஜா தெரிவித்துள்ளாா்.

சங்கரன்கோவில், பெருமாள்பட்டி உப மின் நிலையங்களுக்குள்பட்ட காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கோட்டச் செயற்பொறியாளா் (பொ) பி.ராஜ் தெரிவித்துள்ளாா்.

ஆலங்குளம், கீழப்பாவூா், ஊத்துமலை துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிறபகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளா் ஜி. குத்தாலிங்கம் தெரிவித்துள்ளாா்.

புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய உபமின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி கோட்டம், ஓ. துலுக்கப்பட்டி, அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், கடையம் துணைமின் நிலையப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும் கோட்ட செயற்பொறியாளா் மா.சுடலையாடும் பெருமாள் தெரிவித்துள்ளாா்.

தென்காசி: தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரை உப மின் நிலையங்களுக்குள்பட்ட தென்காசி, மேலகரம், நன்னகரம், குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, வல்லம், புளியரை, சுரண்டை, இடையா்தவணை, சுந்தரபாண்டியபுரம் வாடியூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, பொய்கை, துரைச்சாமிபுரம் போன்ற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தென்காசி கோட்ட செயற்பொறியாளா் ஏ.ஸ்ரீவனஜா தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.