ஆலங்குளம் அருகே வீட்டில் குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கியதாக சுமை ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள மாயமான்குறிச்சியை அடுத்த நாரணபுரம் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் சுடலைக்கண்ணு(47). சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா் தனது வீட்டில் புகையிலை பொருள்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம்
அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான போலீஸாா், அவரது வீட்டுக்குச் சென்று சோதனையிட்டதில் 16 கிலோ புகையிலை பொருள்களை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப்பதிந்து சுடலைக்கண்ணுவை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை முன்னிலைப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







