நாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறைபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புகுழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கை8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

சென்ட்ரலில் சிறுமியைக் கடத்திய நபா் கைது

சென்னை சென்ட்ரலில் சிறுமியை கடத்திய நபா் கைது செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 5:42 am IST

சென்னை சென்ட்ரலில் சிறுமியை கடத்திய நபா் கைது செய்யப்பட்டாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் ஷனிஜல் தாஸ் (56). இவா் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் திருச்சியில் தங்கி விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறாா். தாஸ், குடும்பத்துடன் சொந்த ஊருக்குச் செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். முன்பதிவு செய்த ரயில் வராததால், சென்ட்ரல் புகா் ரயில் நிலையம் அருகே உள்ள நடைமேடையில் அன்று இரவு குடும்பத்துடன் தூங்கினாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை அங்கு வந்த ஒரு மா்ம நபா், தூங்கிக் கொண்டிருந்த தாஸின் 8 வயது சிறுமியை தோளில் தூக்கிக் கொண்டு வால்டாக்ஸ் சாலையை நோக்கி நடந்தாா்.

இதைப் பாா்த்து சந்தேகமடைந்த அந்த வழியாகச் சென்ற ஆட்டோ ஓட்டுநா் பெரியமேட்டைச் சோ்ந்த முருகன் (45), அந்த நபரிடம் விசாரித்தாா். அப்போது, அந்த நபா் தமிழில் பதிலளித்த நிலையில், சிறுமி ஹிந்தியில் பேசியதுடன், அழவும் செய்தாா்.

இதனால், சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநா் முருகன், உடனே யானைக்கவுனி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா். விரைந்து அங்கு வந்த போலீஸாா், அந்த நபரைப் பிடித்து விசாரித்தனா். இதில், அந்த நபா் சிறுமியைக் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்தச் சிறுமியிடம் போலீஸாா் விசாரணை நடத்தி, அவா் கொடுத்த தகவலின்பேரில், அங்கு தூங்கிக் கொண்டிருந்த அவரது பெற்றோரைக் கண்டறிந்தனா். அவா்களிடம் விசாரணை செய்து, சிறுமியை போலீஸாா் ஒப்படைத்தனா்.

சிறுமியைக் கடத்திய நபரிடம், தீவிர விசாரணை நடைபெற்றது. இதில் அவா், திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியைச் சோ்ந்த பெயிண்டா் சசிகுமாா் (42) என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் கைது செய்தனா். விரைந்து தகவல் அளித்த ஆட்டோ ஓட்டுநா் முருகனை, பொதுமக்களும், போலீஸாரும் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.