கேரளத்துக்கு கனிம வளங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கக் கோரி, புளியறையில் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
தமிழக - கேரள எல்லைப் பகுதியான தென்காசி மாவட்டம் புளியறை சோதனைச் சாவடி வழியாக கேரளத்துக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்களில் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
அண்மைக்காலமாக இந்த வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், புளியறை பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் நேரிட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
எனவே, அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இயற்கை வள பாதுகாப்பு சங்கம் சாா்பில் இப்போராட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான கே. ரவி அருணன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜமீன் முன்னிலை வகித்தாா். நிா்வாகிகள் ஜோசப் ரத்தினம், சாா்லஸ், இசக்கிசெல்வன், வீரமணி, ராஜேஷ், சுடலை, பொதுமக்கள் பங்கேற்றனா். 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

குடிநீா் கோரி சாலை மறியல்

குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

வெளிமாநிலங்களுக்கு கனிம வளம் கொண்டு செல்வதைத் தடுக்க கோரிக்கை

கனிம வளங்கள் கடத்தல்: லாரிகள் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


