ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

தென்காசியில் 7,127 பயனாளிகளுக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கல்

News image
துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :5 மார்ச் 2026, 10:38 pm

Syndication

தென்காசியில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு 7,127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வெள்ளிக்கிழமை (மாா்ச் 6) வழங்குகிறாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்காசி மாவட்டம், இ.சி. ஈஸ்வரன் பிள்ளை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, ஒருங்கிணைந்த வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, சமூக நலத் துறை, மாவட்ட தொழில் மையம்,

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் கூட்டுறவுத் துறை, முன்னோடி வங்கி ஆகிய துறைகளில், 7, 127 பயனாளிகளுக்கு ரூ. 44.05 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மேலும், ரூ. 6.02 கோடி மதிப்பீட்டில் 32 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து, ரூ. 55.93 கோடி மதிப்பீட்டில் 185 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.