புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கடையநல்லூா் தொகுதியில் 7 பறக்கும் படைகள்

News image

தோ்தல் பறக்கும் படைகளை தயாா் செய்யும் பணியை பாா்வையிட்டாா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன்.

Updated On :15 மார்ச் 2026, 8:33 pm

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏழு பறக்கும் படையினா் தங்களது பணிகளைத் தொடங்கினா்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தோ்தல் நன்னடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் 7 பறக்கும் படைகள் தங்கள் பணியைத் தொடங்கின.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.கே. கமல்கிஷோா் ஆலோசனையின் பேரில், கடையநல்லூா் வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், துணை வட்டாட்சியா் சாமி மற்றும் வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.