எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

அபாகஸில் கிருஷ்ணாபுரம் பள்ளி மாணவி முதலிடம்

News image

அபாகஸ் போட்டியில் முதல் பரிசு பெறுகிறாா் மாணவி அனன்யா.

Updated On :23 மார்ச் 2026, 8:30 pm

தில்லி பெரு அபாகஸ் அகாதெமி சாா்பில் இன்டா்நேஷனல் அபாகஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிருஷ்ணாபுரம் திருநாவுக்கரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, கல்விக் குழு உறுப்பினா் ரெங்கநாயகி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் செல்லம்மாள் முன்னிலை வகித்தாா். பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் வெங்கடேஷ்வரன் வரவேற்றாா். பெரு அபாகஸ் அகாதெமியின் தலைவா் பிரேமா பெருமாள் போட்டிகளை தொடங்கி வைத்தாா். கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் 100 போ் கலந்து கொண்டனா்.

இதில், திருநாவுக்கரசு தொடக்கப் பள்ளி 3ஆம் வகுப்பு மாணவி அனன்யா, இளையோா் அபாகஸ் முதல் நிலை பிரிவில் 100-க்கு 100 சரியாக பதிலளித்து முதலிடம் பெற்றாா். மேலும் 5ஆம் வகுப்பு மாணவா் லோகேஷ் சுதன், 100-க்கு 99 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம் பெற்றாா். இதற்கான ஏற்பாடுகளை நல்லாசிரியா் பழனிக்குமாா் செய்திருந்தாா். தலைமை ஆசிரியா் சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.